சென்னையில் பாய்லர் வெடித்த பயங்கர விபத்தில் ஒருவர் பலி.!

சென்னை தண்டையார்பேட்டை உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOC) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாயிலர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பிற்பகல் 12 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாயிலர் வெடித்ததாக கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் அலறியடித்து ஓடினர். அப்போது, பாயிலர் அருகே பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களான பெருமாள் மற்றும் 2 பேர் விபத்தில் சிக்கினர்.

பாயிலர்  வெடித்ததை தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, விபத்தில் சிக்கிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அதில் கரிமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.

எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு: பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அவசியம் – அன்புமணி ராமதாஸ்!

ஏற்கனவே, நேற்றிரவு எண்ணூர் அருகே உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவைத் தொடர்ந்து, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் வடசென்னை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.