கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிரமாக பின்பற்றப்பட்டு, வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில், தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூடுவதை தவிர்க்க, கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு, வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர்டெலிவரி செய்யும் முறையை இன்று முதல் செயல்படுத்தியுள்ளது.
இதற்காக தற்போது முதற்கட்டமாக 100 டாடா ஏஸ் வாகனத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் காய்கறிகளை கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே டோர் டெலிவரி செய்யவுள்ளது. இதற்காக தொலைபேசி எண்ணையும், இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முன்பதிவு செய்து காய்கறிகளை சென்னை மக்கள் வீட்டிலிருந்தபடியே வாங்கிக்கொள்ளலாம்.
இந்த முயற்சி வெற்றியடைந்தால், இன்னும் பல வாகனங்கள் மூலம் டோர்டெலிவரி செய்ய கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு முடிவெடுத்துள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…