சென்னை அண்ணா சாலையில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து…! மீட்பு பணி தீவிரம்..!

சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை எழும்பூர் பகுதியில் இருந்து, 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கட்டிடத்தில் சிக்கிய ஊழியர்களை ராட்சத இயந்திர மூலம் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் 50க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்து ஏற்பட்டுள்ள அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் கட்டடத்தில், சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.