ரசாயன ஆலையில் வெடி விபத்து – 6 தொழிலாளர்கள் பலி!

குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இயற்கை ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஆலையில் பணிபுரிந்து வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன்பின் நிர்வாக குழு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற நிலையில், இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

உலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தொழிற்சாலையில் தீயை ஏற்படுத்தியதாகவும், அணு உலை அருகே வேலை செய்து கொண்டிருந்த 6 பேரும் உயிரிழந்தனர் என்று பருச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லீனா பாட்டீல் தெரிவித்தார். இந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்