முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் நேரம் மாற்றம் ?

முதலமைச்சர் பழனிசாமி 2.30 மணிக்கு  செய்தியாளர்களை  சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளது.  

இன்று மாலை 4.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி இன்று மதியம் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.செய்தியாளர் சந்திப்பு 3.30 மணிக்கு நடைபெரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.