அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

இன்று காலையில் இருந்து பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், சென்னை உட்பட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர்,
புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் கிண்டி, ஆலந்தூர், தேனாம்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.