சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்: டெல்லியில் செங்கோட்டை சுற்றி 144 தடை உத்தரவு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராஜ்காட், ஐடிஓ மற்றும் செங்கோட்டை போன்ற பகுதிகளுக்கு அருகே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி காவல்துறை.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது, அப்போது பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிலையில், இந்தப் பகுதிகளில் எந்தவிதமான கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  மேலும், ஏர்பலூன்கள் மற்றும் ட்ரோன்கள் போன்றவை பறக்க டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு, ராஜ்காட், ITO, செங்கோட்டை போன்ற அருகிலுள்ள பகுதிகளில் CrPC குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை முறியடிப்பதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை பலத்த பாதுகாப்பில் ஈடுபடவுள்ளார்கள்.