8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்கு பருவக்காற்றில் ஏற்பட்டுள்ள திசைவேக மறுபாட்டின் காரணமாக மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை , நாமக்கல், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 18 முதல் 22ம் தேதி வரை தென்மேற்கு மத்திய தெற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.