தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. இந்த கனமழை நாளை தொடரும் எனவும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில்  மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும்,  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.