அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!!

  • தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாமக்கல், கோவை, நீலகிரி பெரம்பலூர், கடலூர், சேலம், ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.