இன்று பிற்பகல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு…!

இன்று பிற்பகல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு.

டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், இன்று பிற்பகல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான நதிநீர் பிரச்சனை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய காவிரி நீர் குறித்து பேசவிருப்பதாகவும், மேகதாது, மார்க்கண்டேய அணை விவகாரம் குறித்து பேசவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.