கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட மத்திய அரசு அதிகாரிகள் இன்று தமிழகம் வருகின்றனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பல லட்ச கணக்கில் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, இந்த தென்னை மரங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் உட்பட 3 பேர் ஆய்வு செய்ய உள்ளனர்.