கங்கையில் மிதக்கக்கூடிய சடலங்களுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு எனவும் இதற்கு அனைவரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பேற்க வேண்டியதில்லை எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சரியான மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி கொடுக்க முடியாமல் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசுகள் திணறி வருகிறது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு கூட இடம் இல்லாத நிலையும் பல இடங்களில் உருவாகியுள்ளது. இதனை அடுத்து கங்கையில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வருவது குறித்து பலரும் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அது போல தற்போதும் கங்கையில் சடலங்கள் மிதப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் இறந்த உடல்களின் படங்களை பகிர்வதற்கு தான் விரும்பவில்லை எனவும், இதனால் ஒட்டுமொத்த உலகமும் இந்த படங்களை பார்த்து சோகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வேறுவழியில்லாமல் கங்கை நதியோரம் தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களை விட்டு சென்றவர்கள் வலியை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் இது அவர்களின் தவறல்ல, மத்திய அரசு மட்டுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது அல்ல எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…