19 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை.! காரணம் இதுதான்….

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் விடீயோக்கள் வைத்திருப்பது தொடர்பாக நாடு முழுவதும் சிபிஐ போலீசாரால் 19 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது. 

குழந்தைகள் பாலியல் சம்பந்தப்பட்ட விடீயோக்களை பதிவேற்றம் செய்வது, பகிர்வது , வைத்திருப்பது சட்டப்படி குற்றம். இதன் காரணமாக 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக 56 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளனர்.

ஆபரேஷன் ‘மேகா சக்ரா’ எனும் பெயரில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. சிறார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் விடீயோக்களை வைத்து இருக்கும் பல்வேரு இடங்களை கண்டறிந்து இந்த சோதனை நடைபெற்று வந்துள்ளளது. .

இதில் சட்டத்திற்கு புறம்பாக சிறுவர்கள்  சம்பந்தப்பட்ட பாலியல் விடீயோக்களை வைத்திருந்த பல்வேறு நபர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment