துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல் விதிப்பு!

மணிஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என சிசோடியா தரப்பு வழக்கறிஞர் வாதம்.

சிபிஐ காவல் விதிப்பு:

manishcbi26

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 5 நாள் காவலில் மணிஷ் சிசோடியாவை விசாரிக்க அணுமதிகோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது எழுப்பிய கேள்விகளுக்கு மணிஷ் சிசோடியா முறையாக பதிலளிக்காததால் சிபிஐ தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

சிபிஐ விசாரணை:

cbidelhi27

மணிஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என சிசோடியா தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார். இந்த வாதங்கள் முடிந்த நிலையில், மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா சுமார் 8 மணிநேரம் சிபிஐ விசாரணைக்கு பின் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி:

dcbicout27

கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்பதால் 5 நாள் காவலில் மணிஷ் சிசோடியாவை விசாரிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. அதன்படி, புதிய மதுமான கொள்கை முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment