கனிம வளத்துறை முன்னாள் இணை இயக்குனர் வீட்டில் சிபிசிஐடி சோதனை.! முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு.?

தர்மபுரியில் இன்று கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் அவர்களது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

தர்மபுரியில் இன்று சிபிசிஐடி போலீசார் , கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை ஆரம்பித்த இந்த சோதனை கடந்த ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகிறது. கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் , முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

நேற்று தான், முன்னாள் அதிமுக அமைச்சர்கள், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment