சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர் கொரோனாவால் உயிரிழப்பு!

சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர் கொரோனாவால் உயிரிழப்பு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பால், சில பிரபலங்களும் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் துயர சம்பவம் நேரிடுகிறது.

அந்த வகையில், சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர், கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் தேதி முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.