தமன்னா, விராட் கோலியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த நடிகை தமன்னா மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமலதா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்தனர்.