நளினியை சென்னை சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு

நளினியை சென்னை  சிறைக்கு மாற்றக் கோரி வழக்கில்  அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.நளினி வேலூர் பெண்கள் சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே நளினியின் தாயார் சிறையில் உள்ள தனது மகளை பார்க்க சென்னையில் இருந்து வேலூருக்கு பயணம் செய்து சந்தித்து வந்தார்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.அதாவது தனக்கு வயதாகி விட்ட நிலையில் நளினியை வேலூருக்கு சென்று பார்த்து வருவதில் சிரமம் இருப்பதாக சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.ஆனால் தற்போது அந்த மனுவை பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சிறைத்துறைக்கு ,தமிழக அரசும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தது