அரசியல் காழ்புணர்ச்சியால் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு.
கடந்த 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் குற்றச்சாட்டப்பட்டவர்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று விடுவித்தது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், 2001 வரை என்னுடைய தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
ஆட்சி மாற்றத்திற்கு பின்பு அப்போதைய அதிமுக அரசு பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அரசியல் காழ்புணர்ச்சியில் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்பு அந்த வழக்கு இன்று முடிவு பெற்றுள்ளது. இதன்மூலம் நீதி கிடைத்துள்ளது நியாயம் விளங்கியுள்ளது என தெரிவித்தார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…