தாமதமின்றி பணிகளை நிறைவேற்றுக – முதலமைச்சர் உத்தரவு

மாணவர்கள் எண்ணிகை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல்.

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான நல திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியின நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மயான வசதி மற்றும் மயான வழிப்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குடியிருப்பு, ஓய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எண்ணிகை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக மாற்ற வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மெய்தன்மை சரிபார்ப்பு பணியை நிலுவையின்றி முடிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment