மாற்றுத்திறனாளி ஆசிய போட்டி: அசத்தி தங்கத்தை தட்டிய சந்தீப்….!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில் இந்தியாவின் சந்தீப் சவுதாரி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் கடந்த 6 ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற  16-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் அதில் திங்களன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின்  சந்தீப் சவுதாரி தங்கம் வென்றுள்ளார்.
இந்திய வீரர் சந்நீப் மூன்றாவது முயற்சியில் 60 புள்ளி பூஜ்ஜியம் 1 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்து,நாட்டிற்கு  தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் இலங்கை வீரர் வெள்ளி பதக்கமும், ஈரான் வீரர் வெண்கல பதக்கமும் வென்றனர். ஏற்கனவே இந்தியா மூன்று தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் 8 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment