கனடா குளோபல் டி 20 ! மீண்டும் களத்தில் களமிறங்கும் யுவராஜ் சிங்!

இந்திய அணியின் மூத்த வீரர் யுவராஜ் சிங் கடந்த சில நாள்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் யுவராஜ் சிங் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து வெளியேறிவதாக அறிவித்தார்.
இவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.மேலும் அவர் வெளிநாட்டு 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் மட்டும் விளையாட இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் அவர் கனடா குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்த போட்டி அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளது.
இந்த கனடா குளோபல் போட்டியில்  மொத்தம் 6 அணிகள் மோத உள்ளது.அதில் டொரோன்டோ நேஷனல் அணிக்காக யுவராஜ் சிங் விளையாட உள்ளார்.
மேலும் இப்போட்டியில் மெக்கலம் , கேன் வில்லியம்சன், சோயிப் மாலிக், கெய்ல் ,டு பிளிஸ்சிஸ் ஆகியோர்  கலந்து கொள்ள உள்ளனர்.

author avatar
murugan