விழுப்புரத்தில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி பகுதியில், தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி பகுதியில், தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காயமடைந்த 30க்கும் மேற்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடுப்பை உடைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததாக கூறப்படும்  நிலையில்,இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள்  வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.