கேரளாவில் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்திரன்

கேரளாவில் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவில்லை. 

இந்நிலையில், கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்தரன்  அவர்கள், கேரளாவில் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா அதிகம் இல்லாத பகுதிகள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை தொடரும் என்றும், மாவட்டம், மாநிலங்கள் இடையே பேருந்துகள் செல்ல தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.