உங்களது நோய் எதிர்ப்பாற்றலை கட்டியெழுப்ப…., கொரோனா என்னும் கொடிய அரக்கன் உங்களை அணுகாம இருக்க…! இதை மட்டும் செய்ங்க மக்களே…!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழ்கண்ட வாழிமுறைகளை பின்பற்றுங்கள். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் எந்தவொரு நோயானாலும் எளிதில் தாக்கும். அந்த வகையில் கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத பட்சத்தில் மிகவும் எளிதாக தொற்றிக் கொள்ளும். எனவே நாம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளை தான் பின்பற்ற வேண்டும். தற்போது இந்த பதிவில், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதத்தில் என்னென்ன வைத்தியம் உள்ளது என்பது பற்றி பார்ப்போம். சூடான நீரைப் பருகுதல் நாம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். மேலும் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து குடிப்பது நல்லது.

எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  நாம் செய்யக் கூடிய உணவுகளில், சீரகம், கொத்தமல்லி, உலர்ந்த இஞ்சி பூண்டு போன்ற மசாலா பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிப்பது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நாம் அதிகமாக பகலில் தூங்குவதை விட்டுவிட்டு, இரவு நேரங்களில் கண்டிப்பாக 7-8 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். தூக்கம் குறையும் பட்சத்தில், நமது உடலில் நோய் எதிர்ப்பாற்றலும் குறையும்.

நாம் பாலைக் குடிக்கும்போது அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து குடித்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதாவது அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை 150 மில்லி சூடான பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இவ்வாறு குடிக்க வேண்டும். மூலிகைத் தேநீர் அருந்துவதும் நல்லது. துளசி, இலவங்கப்பட்டை, உலர்ந்த இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட காபி அருந்துவது நல்லது.

வாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வாயை சுற்றி அலசிய பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மேலும், வெற்று நீரில், புதினா இலைகள் மற்றும் கற்பூரத்தை சேர்த்து, நீராவி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

4 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

10 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

11 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

13 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

14 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

14 hours ago