ஹெலிகாப்டர் ரெக்கை வெட்டி உயிரிழந்த 22 வயது இளைஞர்… சுற்றுலா பயணிக்கு நடந்த சோக நிகழ்வு.! 

கிரீஸ் நாட்டில் சிறிய ரக விமானம் மோதி, 22 வயது இளைஞர் பலியாகியுள்ளார். 

கிரீஸ் நாட்டிற்கு ஒரு 22 வயது பிரிட்டிஷ் இளைஞர் சுற்றுலா பயணியாக சுற்றிப்பார்க்க வந்துள்ளார். அங்கு, அவர் சிறிய ரக ஹெலிகாப்டர் பக்கம் நின்றுள்ளதாக தெரிகிறது.

அப்போது, அந்த சிறிய ரக ஹெலிகாப்டரை விமானி இயக்கியதாக தெரிகிறது.  இதில் ரெக்கை அருகே நின்றிந்த 22 வயது இளைஞர் மீது பின் ரெக்கை மோதி, பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவத்தில் யார் மீது தவறு.? எதேச்சையாக நடந்ததா? என பல்வேறு கோணங்களில் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment