திருமணத்தை நிறுத்த காதலனை அழைத்த மணப்பெண்!! தாலி கட்ட முயன்ற காதலன்!!

இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலி தன் திருமணத்தை நிறுத்தி, தன்னை அழைத்துச் செல்லும்படி காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. காலையில் திருமண மண்டபத்தை அடைந்த 24 வயது காதலன், மேடையில் நுழைந்து, மாப்பிள்ளையிடம் இருந்து தாலியை பறித்து, மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் இளைஞனை தடுத்து நிறுத்தி தாக்கினர்.

இச்சம்பவம் சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது, சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில் அந்த இளைஞனும் மணப்பெண்ணும் ஒன்றாக சொகுசு விடுதியில் வேலை பார்த்து வந்ததையும் நெருங்கிய காதலில் இருப்பதையும், மணப்பெண்ணின் வற்புறுத்தலின் பேரில்தான் அந்த இளைஞன் மண்டபத்திற்கு வந்ததையும் கண்டறிந்தனர்.

மணமகன் மற்றும் மணபெண்ணின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது. அத்துமீறி நுழைந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும், மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment