உத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச புகார் – வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவு!

உத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச புகார் எழுந்துள்ளதால், வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக தேவேந்திர சிங் அவர்கள் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது தற்போது லஞ்ச புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று இவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. அதில் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு உத்தரகாண்ட் முதல்வர் தேவேந்திர சிங் ராவத் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என சிபிஐ க்கு உத்தரவிட்டுள்ளது.
author avatar
Rebekal