Breaking:சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் சரண்.!

நேற்று முன்தினம்  சென்னை அண்ணா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சில இளைஞர்கள்  தேனாம்பேட்டை அருகே எதிர் திசையில் வந்த ஒரு காரை  குறிவைத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. அங்கு இதனால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதம் அடைந்தது. வெடிகுண்டுகளை வீசியவர்கள் யார் என  போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த  பிரசாந்த், கமருதீன், ராஜசேகர், ஜான்சன் ஆகிய 4 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்த  நிலையில் இன்று தென்காசியில் 3 பேர் சரணடைந்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சதீஷ், ஹரீஸ், தமிழ்செல்வன் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்  அடைத்தனர்.

author avatar
murugan