Breaking:தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 18 வரை கனமழை எச்சரிக்கை- வானிலை மையம் அறிவிப்பு!

வளிமண்டல கீழடுக்கு தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 18 வரை நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rain Tamilnadu,

அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல்,கரூர்,திருச்சி,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

rain

மேலும்,ஜூன் 19 ஆம் தேதி தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும்,கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகள்,தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment