#Breaking:தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை, திருப்பூர்,திண்டுக்கல்,தேனி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம், நாமக்கல்,கரூர்,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும்,சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 33-34°C மற்றும் 26°C ஆக இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி,இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்,கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள், மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும்,நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment