முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு, ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது, தடுப்பூசி பயன்பாடு குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக மீண்டும் ஒரு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில், அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், தொற்று அதிகமாக உள்ள இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மூன்றாம் அலை வரும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குறைவான மக்களே தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர். எனவே அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை நடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…