#Breaking : மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  சத்தீஸ்கரில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க  உள்ளன.

பாதுகாப்பு சிக்கல்கள் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள இடங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகள் கண்காணிக்கப்படுகின்றன.

மிசோரம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

40 சட்டப்பேரவை தொகுதிகளில் 1276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 8.52 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மிசோரமில் 3 ஆயிரம் போலீசாருடன் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.