#BREAKING: திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

புயல் எச்சரிக்கை காரணமாக நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட எட்டு  மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி இருந்தார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment