#BREAKING : இன்றைய நாள், இந்தியாவிற்கு பெருமை தரும் நாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும் என முதல்வர் பேச்சு. 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில், இன்றைய நாள் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாளாக அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.

குஜராத் முதல்வராக இருந்தபோது 20 ஆயிரம் பேர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரடியாக சென்று அழைக்கலாம் என்று இருந்தேன், ஆனால் கொரோனா தொற்று காரணமாக என்னால் நேரில் சென்று அழைக்க இயலவில்லை.

 பிரதமர் அவர்கள் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்ற போது என்னை நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது எனது நிலை குறித்து எடுத்துக் கூறி அவருக்கு அழைப்பு விடுத்தேன். அவர் உடனடியாக நீங்கள் நன்கு ஓய்வெடுங்கள். நான் நிச்சயமாக விழாவில் கலந்து கொள்வேன் என தெரிவித்தார்.

வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும்; தமிழ்நாடு அரசு நான்கே மாதத்தில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. 4 மாதத்தில் இந்த சர்வதேச போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது; துணை நின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.  தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும்.

கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தது; இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா; இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என  தெரிவித்துள்ளார்.

Recent Posts

நெய்யை யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிஞ்சுக்கோங்க.!

Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…

2 mins ago

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழக கனமழை நிலவரம்…

சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…

17 mins ago

மே 27 வரை காத்திருங்க.. அறிமுகம் லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டாக வருகிறது Samsung Galaxy F55 5G.!

Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தென்…

36 mins ago

கருப்பு உடையில் கலக்கல் மடோனா.. அந்த இடத்தில் சூப்பரான ‘டாட்டூ’.!

சென்னை : நடிகை மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மடோனா அடிக்கடி தனது சமூக…

1 hour ago

அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா.! கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு.!

சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த…

1 hour ago

கடைசியாக ஒரு முறை மோதிக்கொள்ளும் தோனி – கோலி ? மனம் நெகிழ்ந்து பேசிய விராட் கோலி !

சென்னை : இன்று ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் மற்றும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனியும், விராட் கோலியும் இணைந்து…

2 hours ago