#BREAKING: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு!

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் -1 வரிசையில் வரும் 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலை தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற 3,800 பேருக்கான முதன்மை தேர்வு அடுத்தாண்டு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழைகளை வரும் 22-ல் இருந்து ஜனவரி 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது.

TNPSC

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்