#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி,சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர்,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கள்ளக்குறிச்சி,சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,தமிழக கடற்கரை,கொமோரின் பகுதி,மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment