#BREAKING : மதுரையில் ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து…! 2 பேர் பலி…!

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயில் பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அனைத்து பெட்டிகளுக்கு மளமளவென பரவிய நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துரையின் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமையல் செய்த போது ஏற்பட்ட தீ  விபத்தில், இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரும் சமையல்காரர்களாக பணியாற்றி வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இருவரின் உடலையும் மீட்கும் பணியில் தீயணைப்பு வீர்ரகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இருவர் இந்த தீ விபத்தில் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.