BREAKING :வேட்புமனுக்களை பெற வேண்டாம்-மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு…!

உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த நிலையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற இருந்த நிலையில் இன்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அதில் மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

உள்ளாட்சி தேர்தல் எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் இந்த நடவடிக்கையை மாநில தேர்தல் ஆணையம் எடுத்து உள்ளது.

author avatar
murugan