#BREAKING: ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு.!

டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான  அட்டவணையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்  சானிடைசர்கள் கொண்டு வர அறிவுறுத்தல் மேலும், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk