புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் மூடல் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு.

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் (10-01-2022) மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்