#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.!

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், இன்ஸ்பெக்டர் பி.மணிகண்ட குமார் ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவித்துள்ளனர். மூன்று பேரின் பணியை பாராட்டி குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு மற்றும் சந்தோஷ் குமார் உள்பட 17 பேருக்கு இந்திய காவல் பதக்கம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்