காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம்,அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வர சட்ட விரோதமாக சுமார் 250 விசாக்கள் வாங்கி பெற்று தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்,கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அளிக்கப்பட்டது குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனையிட்டு வரும் நிலையில்,5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது.அதன்படி,சென்னை,மும்பையில் தலா 3 இடங்களிலும், பஞ்சாப், கர்நாடகா,ஒடிசாவில் தலா 1 இடங்கத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே,சிபிஐ ரெய்டு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சிப்பதால் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக காங்.எம்எல்ஏ செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்,இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை,வரம்பு மீறிய செயல் எனவும்,ஏற்கனவே அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் சோதனையிட்ட நிலையில்,இந்த சோதனை எதற்காகவென மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…
IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…