#BREAKING: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!

கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு.

கேரளாவின் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை உறுதியான 31 வயதான நபர் அண்மையில் துபாயில் இருந்து கேரளா திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் குரங்கு அம்மை தொற்று கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், இராணுவது நபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) இருந்து கடந்த 12-ஆம் தேதி திரும்பிய கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment