பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை.
தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது, புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப தமிழ்நாடு நிதித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தினால் மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருக்கும் நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.