live :நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு.!

  • வருமான வரி ,ஜிஎஸ் டி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட உள்ளோன்- நிர்மலா சீதாராமன் .
  • 2018-2019ம் நிதிஆண்டுக்கான வருமான வரி  கணக்கு தாக்களுக்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு .
  • கொரோனா எதிரொலியால் தொழில்துறை ,பொதுமக்களுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சலுகைகள் அறிவிப்பு .
  • வரும் 31 -ல் முடியவிருந்த பான் எண் -ஆதார் இணைப்புக்கான அவகாசம்   ஜூன் 30 வரை நீட்டிப்பு .
  • காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆக குறைப்பு
  • ஜிஎஸ்டி , சுங்க வரி உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்ய தொழில் துறையினருக்கு கூடுதல் அவகாசம் .
  • ஆண்டுக்கு 5 கோடிக்கு குறைவாக வருவாய் உள்ள நிறுவனங்கள் தாமத கட்டணம், அபராதம் செலுத்த தேவையில்லை.
  • மார்ச் ,ஏப்ரல் மற்றும்  மே ஆகிய மாதங்களுக்கான ஜிஎஸ்டி  கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்.
  • கொரோனா எதிரொலியாக பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என நிர்மலா சீதாராமன்  கூறி உள்ளார்.
  • கார்ப்பரேட் நிறுவன இயக்குனர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆறுமாதம் விலக்கு .
  •  வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.
  •  பெறு  நிறுவனங்களுக்கு அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது – நிர்மலா சீதாராமன்
author avatar
murugan