#BREAKING: நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை.

டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்க இயக்குனரகம் சீல் வைத்தது. முன் அனுமதியின்றி வளாகத்தை திறக்கக் கூடாது என்றும் யாரும் உள்ளே வரக்கூடாது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று சீல் வைக்கப்பட்டது. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து  டெல்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்திற்கு வெளியே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், தற்போது நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முறைகேடாக யங் இந்தியா நிறுவனம் கைப்பற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment