BREAKING:வழக்கறிஞர்கள் ஆஜராக விலக்கு.!

நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராக விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நீதிமன்றங்களில் தேவையில்லா கூட்டம் தவிர்க்கப்படும்.

ஏற்கனவே இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு காணொளி மூலமாகத்தான் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம்  பிறப்பித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை ஆன்லைனில் மேற்கொள்ளவும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
murugan