பொங்கல் பரிசு தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என அரசு தகவல்.
தமிழ்நாட்டில் ஜனவரி 13-ஆம் தேதி நியாயவிலை கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்றும் எக்காரணம் கொண்டும் தகுதியான பயனாளிக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்குகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை இத்துடன் சேர்த்து முழு கரும்பும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.